ஆள்கூறுகள்: 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E / 10.97; 76.9

பேரூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balabaladurai பயனரால் செய்யப்பட்ட 17:43, 7 பெப்பிரவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (போக்குவரத்து வசதிகள்)
Jump to navigation Jump to search
பேரூர்
பேரூர் கோயிலின் நுழைவாயில் கோபுரம்
பேரூர் கோயிலின் நுழைவாயில் கோபுரம்
பேரூர்
அமைவிடம்: பேரூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E / 10.97; 76.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 7,937 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


418 மீட்டர்கள் (1,371 அடி)

பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. [3]இவ்வூரில் பேரூர் பட்டீசுவரர் கோயில் உள்ளதுC

போக்குவரத்து :

               பேரூர் பேரூராட்சியானது கோவை - சிறுவாணி பிரதான சாலையில் கோவையிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோவை சந்திப்பு இரயில்நிலையம் அருகில் உள்ள இரயில்நிலையம் ஆகும். கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேரூர் பகுதிக்கு கீழ்கண்ட வழித்தடங்களில் 2,2C,2D,2J,2E,S3,S3A,S4,S4A,7J,S8,9,9A,14A,14B,14C,14D,14E,14F,14G,14H,S14,S17,25,S25,35,35B,35C,54,56,59,59A,59B,59C,59D/E,S59,61,91,99,99A,99B,107,160,160C பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E / 10.97; 76.9 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பட்டீசுவரர் ஆலயம்

பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது[6]. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன[7].

இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17
  4. "Perur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. http://www.templenet.com/Tamilnadu/pattperu.html
  7. இந்து நாளிதழில் வெளியான கட்டுரை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேரூர்&oldid=201904" இலிருந்து மீள்விக்கப்பட்டது