சித்தரன்னா
Jump to navigation
Jump to search
| மாற்றுப் பெயர்கள் | சித்தரன்னா, புளிஹோரா, சித்ரன்னம், தாளித்த சாதம் |
|---|---|
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | தென்னிந்தியா |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, புளி, எலுமிச்சை, நிலக்கடலை |
சித்தரன்னா ( கருநாடகத்தில்) அல்லது புளிஹோரா / சித்ரன்னம் ( ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும்) அல்லது தாளித்த சாதம் ( தமிழகத்தில்) என்றழைக்கப்படும், இந்த உணவு தென்னிந்தியாவின் மாநிலங்களில் பரவலாக சமைக்கப்படும் உணவு வகையாகும். இது புளியோதரை போன்று தயாரிக்கப்படும் ஒரு உணவாகும், ஆனால் இது வேறு சுவை தரக்கூடியதாகும்.[1]. வடக்குக் கடலோர ஆந்திராவில் இதனை சட்டி எனவும் அழைக்கின்றனர்.
சாதம் (வேகவைத்த அரிசி), நிலக்கடலை, எலுமிச்சை, புளி கொண்டு தயாரிக்கப்படும் இவ்வகையான உணவு சிலசமயங்களில் மீதமான பழைய சாதத்தைக் கொண்டு செய்யப்படும். இரவு மீதமான சாதத்தை, காலையில் இவ்வாறு சமைப்பதால் இதனை சித்தரன்னா என்று அழைக்கின்றனர்.