மீனார் 1 அணை
மீனார் 1 அணை (Meenar-1 Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் மீனாறூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுனை, ஈர்ப்பு அணை ஆகும். இது சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்ட நீர் திசைதிருப்பல் அணை ஆகும்.[1]
| மீனார் 1 அணை | |
|---|---|
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | பத்தினம்திட்டா, கேரளம் |
| புவியியல் ஆள்கூற்று | 9°24′59″N 77°10′33″E / 9.4164°N 77.1758°E |
| நோக்கம் | மின் உற்பத்தி |
| நிலை | செயல்பாட்டில் |
| திறந்தது | 1991 |
| உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
| அணையும் வழிகாலும் | |
| வகை | பைஞ்சுதை-ஈர்ப்பு |
| தடுக்கப்படும் ஆறு | மீனாறு |
| உயரம் (அடித்தளம்) | 17.20 m (56 அடி) |
| நீளம் | 36.75 m (121 அடி) |
| வழிகால் வகை | தவில்லா, நீர்வழிந்தோடும் அமைப்பு |
| மின் நிலையம் | |
| நிறுவப்பட்ட திறன் | 340மெவா |
| இணையதளம் https://dams.kseb.in | |
சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணை சபைகிரி பெருக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் குள்ளாறு-கவி நீர்த்தேக்கத்திலிருந்தும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் ஒரு சுரங்கப்பாதை வழியாக மீனாறு 2 நீர்த்தேக்கம் நோக்கித் திருப்பி விடப்படுகிறது. பம்பைக்குச் செல்லும் ஆறுகள் மூலம் இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி வழியாகப் பாய்கிறது.[2]
விவரக்குறிப்புகள்
- ஆற்றுப் படுகை: பம்பை
- அணையிலிருந்து நீர் செல்லும் ஆறு: பம்பை
- திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
- வகைப்பாடு: நடுத்தர உயர அணை
- அதிகபட்ச நீர் மட்டம்: 1077.2 மீ
- முழு நீர்த்தேக்க நிலை: 1076.0 மீ
- நீர் சேமிப்பு: 0.03 Mm3
- உயர் மட்டம்: 1076.0 மீ
- ஆற்று நீர் வெளியேற்றம்: பம்பை
மேற்கோள்கள்
- ↑ "Kerala State Electricity Board Limited - Kerala State Electricity Board Limited". www.kseb.in. Retrieved 2021-07-28.
- ↑ "Diversion Structures in Pathanamthitta district – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-28.