பல்லடம்
| பல்லடம் | |||||||
| — முதல் நிலை நகராட்சி் — | |||||||
| ஆள்கூறு | 10°59′46″N 77°17′03″E / 10.9962°N 77.2841°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருப்பூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | பி.ஏ.சேகர் | ||||||
| ஆணையர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | பல்லடம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
58,900 (2001[update]) • 2,502/km2 (6,480/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
23.54 சதுர கிலோமீட்டர்கள் (9.09 sq mi) • 212 மீட்டர்கள் (696 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Palladam/ | ||||||
பல்லடம் (ஆங்கிலம்:Palladam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.பல்லடம் தேசிய நெடுஞ்சாலை NH 67 அமைந்துள்ளது.இங்கிருந்து காமநாயக்கன் பாளையம் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பல்லடம் வட்டத்தில் 92,894 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் பல்லடம் நகராட்சி பகுதியில் 13,213 பேர் வசிக்கின்றனர். .[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பல்லடம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பல்லடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பொருளாதாரம்
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் என்றால் ஜவுளி,இறைச்சி கோழி வளர்ப்பு,விவசாயம்,காற்றாலை.பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன.பல்லடம் உயர் தொழில்நுட்பப் புங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன.இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கல்வி
பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி,தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது.கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ,மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(scad)மற்றும் ப்ரொபஸ்ணல்(professional)ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
பள்ளிகள்
- இன்பேட் ஜிசஸ் மேல்நிலைப்பள்ளி.
- பாரதி மேல்நிலைப்பள்ளி.
- புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
- கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
- ஊட்டி - (112 கி.மீ.): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
- ஆனைமலை.
- பழனி - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
- அமராவதி அணை: முதலைப் பண்ணை.
- திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி.
- ஆழியாறு அணை: குரங்கு அருவி.
- டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).
- வால்பாறை நல்ல மலை வாழிடம்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Palladam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)