ஆள்கூறுகள்: 9°41′09″N 78°14′46″E / 09.685791°N 78.246088°E / 09.685791; 78.246088

முக்குளம்

தமிழர்விக்கியிலிருந்து
ta>Yokishivam பயனரால் செய்யப்பட்ட 19:56, 20 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
Jump to navigation Jump to search
—  கிராமம்  —
முக்குளம்
அமைவிடம்: முக்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°41′09″N 78°14′46″E / 09.685791°N 78.246088°E / 09.685791; 78.246088
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

முக்குளம்(ஆங்கிலம்:mukkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மருதுபாண்டியர்கள்

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். 1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. 24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு மருது பாண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீர மறவர்களையும் தூக்கிலிடப்பட்டனர்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்புவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. திருப்புவனம் ம]]க்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - viruthunagar District;All Taluks Taluk;kariyapatti (TP) Town

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=முக்குளம்&oldid=137758" இலிருந்து மீள்விக்கப்பட்டது