கே. தாயத்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:59, 17 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொதுவாக கே. தாயத் என அழைக்கபடும் தாயத் குஞ்சனந்தன் (17 பிப்ரவரி 1927 - 4 திசம்பர் 2011) என்பவர் மலையாள மொழி சிறார் இலக்கியம், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிய ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் 42 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார், மேலும் இலக்கியத் துறையில் பல்வேறு விருதுகளையும், கற்பித்தலில் சிறந்து விளங்கியத்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

இவர் 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி இன்றைய இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகிலுள்ள பன்னியன்னூரில் சந்து நம்பியார், லட்சுமி அம்மா ஆகிய இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது சகோதரர் தாயத் சங்கரன் ஒரு பிரபல எழுத்தாளர் மற்றொரு சகோதரரான தாயத்து பாலன் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இவர் தனது கல்வியை குன்னும்மாள் மேல்நிலைப் பள்ளி, பிஇஎம்பி உயர்நிலைப் பள்ளி, கதிரூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பிரென்னன் கல்லூரி ஆகியவற்றில் முடித்தார்.

ஆசிரியர் பணியில் சேருவதற்கு முன்பு, இவர் திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு விற்பனையாளராகவும், துணைப் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகவும், ராணுவ முகாமில் ஆபரேட்டராகவும், மெட்ராஸ் பொது மருத்துவமனையில் எழுத்தராகவும் சிறிது காலம் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு அகில இந்திய வானொலி நிலையத்திலும் பணியாற்றினார். கோழிக்கோடு, புதியாராவில் உள்ள புன்னச்சேரி உயர்நிலைப் பள்ளியிலும், கண்ணூரில் உள்ள சோக்லியில் உள்ள லட்சுமிவிலாசம் உயர்நிலைப் பள்ளியிலும் சில மாதங்கள் கற்பித்த பிறகு, 1952 இல் பனூர் உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். இவர் அதே பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தபோது 1982 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 2011 திசம்பர் 4 அன்று தனது 85 வயதில் இறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் கதை, கவிதை, நாடகம், சிறார் இலக்கியம், கட்டுரைகள் உட்பட 42 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1951 இல் வெளியான புத்தன்கனி ஆகும். இவரது முதல் கவிதைத் தொகுப்பான பல்பதங்கள் 1953 இல் வெளியிடப்பட்டது. இவரது நாம் சங்கல போட்டிச்ச கதா, என்பது இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த பல விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகளாகும். மாநில குழந்தைகள் இலக்கிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "சுதந்திர சமரம் குட்டிக்கள்க்" (குழந்தைகளுக்கான சுதந்திரப் போராட்ட வரலாறு) என்ற புத்தகத்தை எழுதுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். தாயத் ஒரு சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். தாயத் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது தோட்டக்காரன் நாடகம் கோழிக்கோடு அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பான ஊழியர் அல்லாத ஒருவரின் முதல் நாடகமாகும்.

விருதுகள்

கே. தாயத்து பெற்ற சில விருதுகள் பின்வருமாறு.

இலக்கியத்திற்கான விருதுகள்
கற்பித்தலுக்கான விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=கே._தாயத்&oldid=339537" இலிருந்து மீள்விக்கப்பட்டது