தணத்தல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 11:54, 26 பெப்பிரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தணத்தல் என்பது சஙக இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தல். இதனை 'ஒருவழித் தணத்தல்' என்பர். இந்தப் பிரிவுக்குக் காரணம் இல்லை. தற்செயலாக நிகழும். காலமும் இல்லை. (மணத்தல் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருத்தல்)

சங்கப் பாடல்களில் குறிப்புகள்

  • புலவர் வெள்ளிவீதியார் தணத்தல் பற்றிக் குறிப்பிடுகிறார். (குறுந்தொகை 386)
  • குறியிடம் பிழைத்தல், காலம் கனியாமை முதலான காரணங்களால் இப் பிரிவு நேரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. (நூற்பா 1053)
  • 'ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்' என்று இதனை நம்பி அகப்பொருள் விளக்கம் குறிப்பிடுகிறது. (நூற்பா 40)
"https://tamilar.wiki/w/index.php?title=தணத்தல்&oldid=387246" இலிருந்து மீள்விக்கப்பட்டது