சிவஞானபோதம்
Jump to navigation
Jump to search
சிவஞான போதம், மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முக்கியமானதும், தலை சிறந்ததுமாகும். கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், திருவெண்ணெய் நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்தவருமான மெய்கண்ட தேவர் என்பவர் இயற்றிய இந் நூல், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக எடுத்துரைக்கிறது. இந்த நூல் பொல்லாப் பிள்ளையார் வணக்கம், அவையடக்கம், மற்றும் இரண்டு அதிகாரங்கள்(பொது அதிகாரம், உண்மை அதிகாரம்), நான்கு இயல்கள்(பிரமாண இயல், இலக்கண இயல், சாதன இயல் பயனியல்), பன்னிரண்டு சூத்திரங்கள் என அமைந்துள்ளது.
உசாத்துணைகள்
- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
- மெய்கண்ட தேவர், சிவஞானபோதம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.