ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2683636 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்) |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (15 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 14: | வரிசை 14: | ||
|மக்கள் தொகை = 10,247 |
|மக்கள் தொகை = 10,247 |
||
|மக்களடர்த்தி= |
|மக்களடர்த்தி= |
||
|அஞ்சல் குறியீட்டு எண்= |
|அஞ்சல் குறியீட்டு எண்=614 625 |
||
|வாகன பதிவு எண் வீச்சு= TN49 |
|வாகன பதிவு எண் வீச்சு= TN49 |
||
|தொலைபேசி குறியீட்டு எண்= 04372 |
|தொலைபேசி குறியீட்டு எண்= 04372 |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
|}} |
|}} |
||
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். |
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது '''முத்தம்பாள்புரம்''' எனவும் '''முத்தம்பாள்சத்திரம்''' எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, [[ஒரத்தநாடு வட்டம்]], [[ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள [[கால்நடை மருத்துவக் கல்லூரி|கால்நடைக் கல்லூரியும்]] ஒன்றாகும். |
||
இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். [[அம்மன்]] பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.<ref name=DM>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/32/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref> |
|||
== பெயர்க்காரணம் == |
== பெயர்க்காரணம் == |
||
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref> |
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>{{cn}} |
||
| ⚫ | |||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ; மேற்கில் [[புதுக்கோட்டை]] 28 கிமீ; தெற்கில் பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கி.மீ., கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கி.மீ., மேற்கில் [[கறம்பக்குடி]] 25 கி.மீ., தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 23 கி.மீ.,தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கி.மீ., வடமேற்கில் [[அம்மாப்பேட்டை]] 24 கி.மீ., வடகிழக்கில் [[வல்லம்]] 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
||
<ref>[https://www.census2011.co.in/data/town/803709-orathanadu--mukthambalpuram-tamil-nadu.html Orathanadu - Mukthambalpuram Population Census 2011]</ref><ref> |
<ref>[https://www.census2011.co.in/data/town/803709-orathanadu--mukthambalpuram-tamil-nadu.html Orathanadu - Mukthambalpuram Population Census 2011]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/694301/orathanadu-mukthambalpuram |title=Orathanadu - Mukthambalpuram Town Panchayat |access-date=2019-03-27 |archive-date=2021-01-17 |archive-url=https://web.archive.org/web/20210117060924/https://indikosh.com/city/694301/orathanadu-mukthambalpuram |url-status=dead }}</ref> |
||
== தொழில் == |
== தொழில் == |
||
| வரிசை 42: | வரிசை 43: | ||
== கல்லூரிகள் == |
== கல்லூரிகள் == |
||
* அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி |
|||
* பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கலைக்கல்லூரி |
|||
* அரசு கல்வியல் கல்லூரி |
* அரசு கல்வியல் கல்லூரி |
||
* அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி |
* அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் |
||
* அரசு வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் ( ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா ) |
|||
* தர்மாம்பாள் |
* தர்மாம்பாள் கலை & அறிவியல் கல்லூரி |
||
* அரசு தொழில்பயிற்சி நிலையம் |
|||
* அரசு நில அளவை பயிற்சி நிலையம் |
|||
== ஆலயம் == |
== ஆலயம் == |
||
| வரிசை 54: | வரிசை 58: | ||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும், பட்டுக்கோட்டைக்கும் மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் அதிக பேருந்துகள் இயங்குகிறது.இது தவிர புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்ட தலைநகருக்கும் நேரடி பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
== ஆதாரங்கள் == |
|||
<references /> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
||
08:38, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஒரத்தநாடு | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| வட்டம் | ஒரத்தநாடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பெருந்தலைவர் | சே. திருமங்கை | ||||||
| சட்டமன்றத் தொகுதி | ஒரத்தநாடு
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 10,247 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/orathanadu | ||||||
ஒரத்தநாடு (ஆங்கிலம்: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, ஒரத்தநாடு வட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள கால்நடைக் கல்லூரியும் ஒன்றாகும்.
இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), கள்ளர் என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். அம்மன் பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.[4]
பெயர்க்காரணம்
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.[5][சான்று தேவை]
பேரூராட்சியின் அமைப்பு
7.20 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் தஞ்சாவூர் 23 கி.மீ., கிழக்கில் மன்னார்குடி 23 கி.மீ., மேற்கில் கறம்பக்குடி 25 கி.மீ., தெற்கில் பட்டுக்கோட்டை 23 கி.மீ.,தென்கிழக்கில் மதுக்கூர் 25 கி.மீ., வடமேற்கில் அம்மாப்பேட்டை 24 கி.மீ., வடகிழக்கில் வல்லம் 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 மக்கள்தொகையும் கொண்டது. [7][8]
தொழில்
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.
விளையாட்டு
துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. விழாக்காலங்களில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன.
கல்லூரிகள்
- அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி
- அரசு கல்வியல் கல்லூரி
- அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
- அரசு வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் ( ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா )
- தர்மாம்பாள் கலை & அறிவியல் கல்லூரி
- அரசு தொழில்பயிற்சி நிலையம்
- அரசு நில அளவை பயிற்சி நிலையம்
ஆலயம்
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஆட்சி
ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.
போக்குவரத்து
ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கும், பட்டுக்கோட்டைக்கும் மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் அதிக பேருந்துகள் இயங்குகிறது.இது தவிர புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்ட தலைநகருக்கும் நேரடி பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
- ↑ உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்
- ↑ ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Orathanadu - Mukthambalpuram Population Census 2011
- ↑ "Orathanadu - Mukthambalpuram Town Panchayat". Archived from the original on 2021-01-17. Retrieved 2019-03-27.