ஆள்கூறுகள்: 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E / 10.62; 79.27

ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 48: வரிசை 48:


== ஆலயம் ==
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.மற்றும் முத்துமாரியம்மன் ( அமைவிடம் பாளாம்புத்தூர் குடிக்காடு) பிரபலமான கோவிலாகும் .இந்த கோவில் சுற்றியுள்ள 12 கிராமங்களை அடங்கிய தாகும்( பூவத்தூர், கக்கரை,பாளாம்புத்தூர்,குடிக்காடு,புதூர்,பேய்க்கருமன் கோட்டை,புலவன் காடு, தெலுங்கன் குடிக்காது,நெடுவாக்கோட்டை,பொட்டலங்குடிக்காடு, வளர்த்தான் தெரு)


== ஆட்சி ==
== ஆட்சி ==

15:52, 12 மே 2019 இல் நிலவும் திருத்தம்

ஒரத்தநாடு
—  பேரூராட்சி  —
ஒரத்தநாடு
இருப்பிடம்: ஒரத்தநாடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E / 10.62; 79.27
நாடு படிமம்:Flag of India.svg இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் ஒரத்தநாடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் சே. திருமங்கை
சட்டமன்றத் தொகுதி ஒரத்தநாடு

-

சட்டமன்ற உறுப்பினர்

ஆர். வைத்திலிங்கம் (அதிமுக)

மக்கள் தொகை 10,247 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/orathanadu


ஒரத்தநாடு (ஆங்கிலம்: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இதனை முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, ஒரத்தநாடு வட்டம் மற்றும் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

பெயர்க்காரணம்

ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.[4]

அமைவிடம்

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் மன்னார்குடி 23 கிமீ; மேற்கில் புதுக்கோட்டை 28 கிமீ; தெற்கில் பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 மக்கள்தொகையும் கொண்டது. [6][7]

தொழில்

ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.

விளையாட்டு

துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. விழாக்காலங்களில் பரிசுப் போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன.

கல்லூரிகள்

  • பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கலைக்கல்லூரி
  • அரசு கல்வியல் கல்லூரி
  • அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி
  • தர்மாம்பாள் கலை கல்லூரி

ஆலயம்

இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.மற்றும் முத்துமாரியம்மன் ( அமைவிடம் பாளாம்புத்தூர் குடிக்காடு) பிரபலமான கோவிலாகும் .இந்த கோவில் சுற்றியுள்ள 12 கிராமங்களை அடங்கிய தாகும்( பூவத்தூர், கக்கரை,பாளாம்புத்தூர்,குடிக்காடு,புதூர்,பேய்க்கருமன் கோட்டை,புலவன் காடு, தெலுங்கன் குடிக்காது,நெடுவாக்கோட்டை,பொட்டலங்குடிக்காடு, வளர்த்தான் தெரு)

ஆட்சி

ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.

போக்குவரத்து

ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, அம்மாபேட்டை போன்ற ஊர்களுக்கும் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார்ப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாடு நகரில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்
  5. ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்
  6. Orathanadu - Mukthambalpuram Population Census 2011
  7. Orathanadu - Mukthambalpuram Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=ஒரத்தநாடு&oldid=200204" இலிருந்து மீள்விக்கப்பட்டது