ஆனந்தர்
தமிழர்விக்கியிலிருந்து
imported>Hariniworld பயனரால் செய்யப்பட்ட 14:53, 18 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (படம் சேர்த்துள்ளேன்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கியிலிருந்து நீக்கப்படலாம். |
போற்றுதலுக்குரிய ஆனந்தர் | |
|---|---|
ஆனந்தரின் தலை உருவச் சிலை | |
| சுய தரவுகள் | |
| பணி | பிக்கு, கௌதம புத்தரின் அணுக்கத் தொண்டர் |
| பதவிகள் | |
| ஆசிரியர் | கௌதம புத்தர் |
ஆனந்தர் புத்தரின் அணுக்கச் சீடர் ஆவார். புத்தரின் உறவினரான இவர் அவருடன் சேர்ந்து பல பகுதிகளுக்கும் சென்றவர்; புத்தர் பேசியவற்றை மனதில் நிறுத்திக் கொண்டவர். சுத்த பிடகத்தில் உள்ள பல சூத்திரங்கள் இவரால் நினைவிலிருந்து கொண்டு வரப்பட்டவையே. முதல் பௌத்தப் பெருங்குழுமத்தில் புத்தரின் போதனைகள் பலவற்றையும் இவரே நினைவுகூர்ந்து கூறினார். இதன் காரணமாக இவர் “தம்மத்தின் பாதுகாவலர்” என அறியப்படுகிறார்.

புத்தரின் கூற்றுப் படி ஒவ்வொரு புத்தரும் தம் பிறவியில் இரண்டு முதன்மைச் சீடர்களையும் ஒரு அணுக்கச் சீடரையும் கொண்டிருப்பர். அந்த வகையில் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களாக மகாகாசியபர், சாரிபுத்ரரும், மொக்கல்லானரும் விளங்கினர். அணுக்கச் சீடராக ஆனந்தர் விளங்கினார்.
| இது பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம் |
"https://tamilar.wiki/w/index.php?title=ஆனந்தர்&oldid=264010" இலிருந்து மீள்விக்கப்பட்டது