கோலியர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:11, 7 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கோலிய நாட்டு இளவரசி யசோதரை மற்றும் ராகுலனுடன் (இடப்பக்கம்-அடியில்) கௌதம புத்தர் - அஜந்தா குகைகள்

கோலியர்கள் (Koliyas) இந்தியத் துணைக்கண்டத்தின், தற்கால நேபாள நாட்டின், லும்பினி மாவட்டத்தின் சில பகுதிகளை ஆண்ட சூரிய வம்சத்தின் இச்வாகு குல சத்திரியர்கள் ஆவார். [1] கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் சாக்கியர்களுடன் மணவினை தொடர்புடையவர்கள். சாக்கிய நாட்டரசர் சுத்தோதனர் கோலிய நாட்டின் இளவரசிகளான மாயா தேவி மற்றும் மகாபிரஜாபதி கௌதமியை மணந்தவர். கௌதம புத்தரின் மனைவி யசோதரையும் கோலிய நாட்டு இளவரசியாவர். ரோகிணி ஆற்று நீருக்காக கோலியர்களும் சாக்கியர்களும் போரிட்டனர்.தமிழகத்தில் வாழ்கின்ற கோலியர்களும்(Koliyar) மற்றும் இந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கோலி(Koli) இந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

வரலாறு

சாக்கியர்களும், கோலியர்களும் ரோகிணி ஆற்றின் இருமருங்கிலும் ஆட்சி புரிந்தவர்கள். இவ்விரு அரச குலத்தினரும் கோசல நாட்டிற்கு அடங்கிய தன்னாட்சி கொண்ட குடியரசுத் தலைவர்கள் ஆவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோலியர்&oldid=344977" இலிருந்து மீள்விக்கப்பட்டது