ஆம்ரபாலி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Amrapali
படிமம்:Amrapali greets Buddha Roundel 36 buddha ivory tusk.jpg
கௌதம புத்தரை வரவேற்கும் நடன மங்கை அமர்பாலி, புதுதில்லி தேசிய அருங்காட்சியகம்
பிறப்புஅண். கிமு 500
வைசாலி
இறப்புவைசாலி
பணிநடனமங்கை
அறியப்படுவதுவைசாலிக் குடியரசின் அரசவை நடனமங்கை

ஆம்ரபாலி (Āmrapālī) அல்லது அம்பாபாலி (Āmrapālī) அல்லது அமர்பாலி, பண்டைய இந்தியாவின் வைசாலி அரசவை நடனமங்கை.[1][2][3] இவளைப் பற்றி பழைய பௌத்த மற்றும் பாளி மொழி நூல்களில் செய்திகள் அறியப்படுகின்றன. சமஸ்கிருத்தத்தில் "ஆம்ரம்" என்பது "மா"வையும், "பாலி" - இலையையும் குறிக்கும், அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்ரபாலி ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தமையால், வைசாலி நகரத்தின் பல செல்வந்தர்கள் அவளைத் தனதாக்க முற்பட்டனர். இப்பிரச்சனையைத் தீர்க்க அவளை அரசவை நாட்டியக்காரியாக்க வேண்டியிருந்தது. ஆம்ரபாலியின் அழகு அண்டை நாடுகளுக்கும் பரவ, வைசாலியின் அண்டைநாடான மகதத்தின் அரசனான பிம்பிசாரனுக்கு, அவளுக்கு இணையான அழகுடைய நடனமங்கையைத் தனது அரசவைக்கு நியமிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. பின் வைசாலி மீது படையெடுத்து அவளை மணமுடித்தான். இவர்களிருவருக்கும் பிறந்த மகவுக்கு விமல கொண்டண என பெயரிடப்பட்டது.

ஒருமுறை அமர்பாலி புத்தருக்கு விருந்தளிக்க விரும்பினாள். புத்தரும், வைசாலி அரசின் எதிர்ப்பையும் மீறி விருந்துக்கு வர ஒப்புக்கொண்டார். ஆம்ரபாலி புத்தருக்கு ராஜபோக உபச்சாரம் செய்தாள். இந்நிகழ்வுக்குப்பின் அவள் புத்த மதத்தை தழுவி புத்த பிக்குணியாக மாறினார். அவள் மகன் விமல கொண்டணனும் பௌத்த பிக்குவானான்.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  1. "The Sunday Tribune - Spectrum". tribuneindia.com. Retrieved 4 July 2016.
  2. History of Vaishali
  3. "The Sunday Tribune - Spectrum". www.tribuneindia.com. Retrieved 2017-04-18.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆம்ரபாலி&oldid=252116" இலிருந்து மீள்விக்கப்பட்டது