பங்காள
Jump to navigation
Jump to search
பங்காள இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
| ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 ப ம1 ரி2 ப ச் |
| அவரோகணம்: | ச் நி2ப ம1 ரி2 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது சாடவ இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் மத்திமம், ரிசபம் என்பனவும், ஆரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Music Handbook - Raga Index -B 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.